திங்கட்கிழமை முதல், எரிவாயு விநியோகிக்கப்படும்

விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களைக் கோரியுள்ள லிற்றோ எரிவாயு நிறுவனம், எதிர்வரும் திங்கட்கிழமை முதல், எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இதுவரை , இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் இரு நாட்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டமையே இதற்கு காரணம் என லிற்றோ அறிவித்துள்ளது.

கடந்த 3 நாட்களாக லிற்றோ நிறுவனத்தினால் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.