தாத்தா, மாமா, சகோதரரால் பாலியல் வன்புணர்விற்குள்ளான 13 வயது சிறுமி கர்ப்பம்

13 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி வந்த தாத்தா, மாமா மற்றும் அவரது மூத்த சகோதரர் உட்பட மூவரை எதிமலே பொலிசார் கைது செய்துள்ளனர்.

மொனராகலை, எதிமலே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்,   பாடசாலை மாணவியான சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து இவரை பரிசோதித்த வைத்தியர்கள் கருத்தரித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை அதிகாரிகள் எத்திமலே பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து , பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர் இதில் , சிறுமி தனது தாத்தா, மாமா (தாயின் சகோதரர்) மற்றும் சிறுமியின் மூத்த சகோதரரால் தொடர்ந்து வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சிறுமியின் சகோதரனை முதலில் கைது செய்த பொலிசார், இதையடுத்து தாத்தா மற்றும் மாமாவை கைது செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி மேலதிக சட்ட வைத்திய மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.