வடமராட்சி தனியார் பேருந்து சேவைச் சங்கம் நாளை வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
பருத்தித்துறை சாலையூடாக வழங்கப்படுகின்ற டீசலில் பல்வேறு முறைகேடுகள், அவமதிப்புகள் காரணமாக உடையவர்கள் நடவடிக்கை எடுகக வேண்டும் என கோரியே போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை அவர்கள் பருத்தித்துறை அலுவலகத்தில் நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.