டீசல் நிரப்ப வரிசையில் நின்ற சாரதி உயிரிழப்பு

டீசல் நிரப்ப வரிசையில் நின்றிருந்த 43 வயதான ஒருவர் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

காலி- தவலம ஹினிதும பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது பாரவூர்திக்கு டீசல் நிரப்ப வரிசையில் நின்றிருந்த குறித்த நபர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து எரிபொருள் நிரப்ப சுமார் ஒரு மணிநேரம் வரிசையில் நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.