ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டிலிருந்து 80 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டில் இருந்து 80 எரிவாயு சிலிண்டர்கள் போராட்டக்காரர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத்தின் வீட்டில் இருந்து 400 யூரியா உர மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டு உர மூட்டைகள் அனைத்தும் போராட்டக்காரர்களால் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன

இதேவேளை, குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டிலும் 60 எரிவாயு சிலிண்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.