நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது சிறைச்சாலை பாதுகாவலர் டிலான் ஸ்ரீ அபேவர்தன உயிரிழந்துள்ளார். Prisons& Corrections
இந்த நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் தமயந்தி பெரேரா தெரிவித்துள்ளார்.
“மகன் வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையை முடித்துவிட்டு வீடு திரும்பவிருந்த போது, என்னிடம் தொலைபேசியில் பேசினார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது, அதனால் இன்று என்னால் வீடு வர முடியாது என கூறினார். அவர் கூறியது போலவே, எனது மகனால் வீடு திரும்ப முடியவில்லை. சிறைக்கைதிகள் அவரை மிகக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டனர். என் மகனுடன் சிறைக்குள் சென்ற அதிகாரிகள் குழுவைச் சிறைக்கைதிகள் மிகவும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். என் மகனின் மரணம் குறித்து எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. ஆக்ரோஷமாகச் செயல்படும் கைதிகள் நிறைந்த இடத்திற்கு, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எனது மகனும் அவனது குழுவினரும் ஏன் அனுப்பப்பட்டார்கள்? எனவே, இது குறித்து அரசாங்கம் உரிய மற்றும் நியாயமான விசாரணையை நடத்த வேண்டும்,” என்று டிலானின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.