சிட்னியின் பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 10 வயதுடைய சிறுமி ஒருவரும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
சிட்னியின் பொண்டி கடற்கரையில் நேற்று (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர் .
சம்பந்தப்பட்ட துப்பாக்கிதாரிகள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிதாரி ஒருவர் உயிரிழந்ததுடன், உயிரிழந்தவர் 50 வயதுடைய தந்தை எனவும், மகனான 24 வயது இளைஞர் தற்போது படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த துப்பாக்கிச் சூடு யூதர்களின் கொண்டாட்ட நிகழ்வொன்றின் மீதே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேநேரம் இச்சம்பவத்தில் 29இற்கு மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.