-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட அரச அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம மற்றும் திருகோணமலை மாவட்ட பிரதேச செயலகங்களை சேர்ந்த பிரதேச செயலாளர்களுடன் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடலொன்று நேற்று சனிக்கிழமை திருகோணமலையில் இடம் பெற்றது.
இதன் போது திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களில் சட்டவிரோத சுரங்கம் மற்றும் மணல் அகழ்வு நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அதனபடி தற்போது காணப்படும் பொறிமுறை குறித்து விளக்கம் அளிக்குமாறும், சட்டவிரோத சுரங்கம் மற்றும் மணல் அகழ்வு தொடர்ந்து நிலவி வருவதால் அது குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறும் ஆளுனர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

