சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடிப்போக்கு சந்திப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கிளிநொச்சி பொலிஸ் சிறப்பு பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மெதவலவினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 850 லீற்றர் டீசலும், 950 லீற்றர் மண்ணெண்ணெய்யும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் நீதிமன்றில் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.