சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு சிகரெட்டுகளை கொண்டு வந்த சீனப் பெண் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வந்த சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை இரவு மலேசியாவிலிருந்து இலங்கை வந்த போது, கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்து 29,200 சிகரெட்டுகளை சுங்கத்தினர் கைப்பற்றியுள்ளதாகவும், அவற்றின் பெறுமதி சுமார் 43 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க