க.பொ.த சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்ட திகதியில் இடம்பெறும்

2021 ஆம் கல்வி ஆண்டுக்கான  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக, இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை, என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை  எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜுன் மாதம் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இவ்வாறு பரப்பப்படும் போலி தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது