குளிக்கச் சென்ற மூதாட்டி ரயிலுடன் மோதி பலி

கம்பஹா, மீரிகம விஜய ரஜதஹன ரயில் மார்க்கத்தில் இன்று வியாழக்கிழமை காலை ரயிலுடன் மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீரிகம விஜய ரஜதஹன பகுதியில் வசிக்கும் 81 வயதுடைய மூதாட்டியொருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் குளிப்பதற்காக மீரிகம விஜய ரஜதஹன ரயில் மார்க்கத்திற்கு அருகில் உள்ள கிணற்றுக்குச் சென்று மீண்டும் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் போது ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்