குளவி கொட்டுக்கு இலக்காகி 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-கிளிநொச்சி நிருபர்-

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 18 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது குளவிக் கூடு கலைந்து குளவிகள் கொட்டியதில் 18 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.