காலி முகத்திடல் சம்பவத்திற்கு சஜித் பிரேமதாச கண்டனம்

நேற்று வியாழக்கிழமை இரவு காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க மேற்கொள்ளப்பட்ட கூட்டு இராணுவ நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது கண்டனத்தையும், ஆட்சேபனையையும் டுவிட்டர் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.

குறித்த டுவிட்டர் செய்தியின் ஊடாக, இன்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கோழைத்தனமான தாக்குதலாக தான் கருதுவதாகவும், இது ​​சர்வதேச சமூகத்தின் முன் நாட்டின் பிம்பம் அபாயகரமானதாக காட்டப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.