காரைநகர் கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்-

நேற்று புதன்கிழமை  பி.ப 10 மணியளவில் இலங்கை – காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 30,35 மற்றும் 57 வயதுகளுடையவர்கள் ஆவர்.

இதன்போது அவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்கு உபயோகித்த IND-TN-11-MM 108 என்ற இலக்கம் கொண்ட படகு ஒன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைகளுக்காக மைலிட்டி கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்படட்டனர்.