காதலிக்கு வீடியோ அழைப்பு ஏற்படுத்தி காதலி பார்த்துக்கொண்டிருக்க உயிரை மாய்த்த இளைஞன்

கொழும்பு – புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த இளைஞன் காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த 19 வயதுடைய இளைஞன் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியை சேர்ந்தவர் என தெரிய வருகின்றது.

குறித்த இளைஞன், நேற்று புதன்கிழமை தொழுகையில் ஈடுபடுவதாகக் கூறி, குறித்த கடை அமைந்துள்ள கட்டடத்தின் மூன்றாவது மாடிக்கு சென்றுள்ளார்.

இதன்போது தனது காதலிக்கு காணொளி அழைப்பை ஏற்படுத்தி விட்டு, காதலி பார்த்துக் கொண்டிருக்கையில் அவர் உயிரை மாய்த்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த இளைஞனின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்