காகம் கனவில் வந்தால் என்ன பலன்

காகம் கனவில் வந்தால் என்ன பலன்

காகம் கனவில் வந்தால் என்ன பலன்

⚫இரவு கனவுகள் பொதுவானவை. ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை குறிக்கின்றன. ஒரு கனவில் என்ன நடக்கிறது என்பது பற்றிய விவரங்கள் கனவு அறிவியலில் விளக்கப்பட்டுள்ளன. நம்மில் பெரும்பாலானோர் காகங்களை ஒருமுறையாவது கனவில் பார்த்திருப்போம். ஆனால் உங்கள் கனவில் காகம் கண்டால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.

◼காகம் யமதர்மராஜா என்று கருதப்படுகிறார். உங்கள் கனவில் காகங்கள் பயங்கரமான சத்தம் எழுப்புவதைக் கண்டால், அது வீட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கான அறிகுறி என்று கூறுகின்றனர். எதிர்பாராத விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கனவு அறிவியல் கூறுகிறது.

◼கனவில் காகம் அமர்ந்திருப்பதைக் கண்டால், அது கெட்ட அறிகுறி என்று கூறப்படுகிறது. இப்படிப் பார்த்தால் ஏதோ நடக்கக் கூடாது என்பார்கள்.

◼உங்கள் கனவில் பறக்கும் காகத்தை நீங்கள் கண்டால், நீங்கள் மனநல பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இது பல பிரச்சனைகளை குறிப்பதாக கூறப்படுகிறது. நேரம் மற்றும் பணம் இரண்டும் வீணடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

◼கனவில் காக்கையை பிடித்திருப்பதை நீங்கள் கண்டால் அது நல்ல அறிகுறி என்கிறது கனவு அறிவியல். இப்படி காகம் தோன்றினால் உங்கள் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும், வீட்டில் சாதகமான சூழல் நிலவும் என்பது ஐதீகம்.

◼கனவில் காகம் நமது தலைக்கு மேலே கூட்டம் கூட்டமாக பறப்பது போன்றோ அல்லது கூட்டம் கூட்டமாக அமர்ந்திருப்பது போன்றோ கனவு வந்தால் கனவு காண்பவரின் அறிவே வியங்கும் அளவிற்கு முடிவுகளை எடுப்பார்கள்.

◼கனவில் ஒற்றை காகம் அல்லது ஒற்றை காகம் தங்களை நோக்கி பார்த்து வருவது போல் கனவு வந்தால் அல்லது ஒற்றை காகம் நம்மை கொத்துவது போன்று கனவு கண்டால் கனவு கண்டவர் நீதியரசர் சனீஸ்வரரின் சனிகிரக பாதிப்புகள் முழுமையாக இன்னும் முடிவடையவில்லை என்பதை இக்கனவு கூறுகின்றது. அதேபோல் இக்கனவு தங்களுக்கு கண் திருஷ்ட்டி அதிகமுள்ளதையும்இ எதிரிகள் தங்களுக்கு செய்திருக்கும் செய்வினை மற்றும் குடும்பத்தில் ஏற்படவிருக்கும் பிரச்சனைகளுக்கு எச்சரிக்கையை கூறுகின்றது

◼காகம் மரத்தில் அமர்ந்திருப்பது போல் கனவு வந்தால், கனவு கண்டவருக்கு வரவிருக்கும் பிரச்சனைகளை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாகும்.

◼கனவில் காகத்தை சாதாரணமாக பார்த்தால் கனவு காண்பவர் அவரின் உறவு நிலையில் உள்ளவரை உடல் ரீதியான கவர்ச்சியில் மட்டும் மனம் இருக்கும். மனதில் உள்ள அன்பை ஒருவர் மற்றவருக்கு தெரியப்படுத்தமாட்டார்கள் என்பதை உணர்த்துகிறது.

பரிகாரம்

🔹தங்கள் கனவில் காகத்தை கண்டால் அதற்கு மறுநாள் காலையில் எழுந்து குளித்துவிட்டு சனீஸ்வரனுக்கு விளக்கு ஏற்றி வணங்க வேண்டும். பின்பு காகங்களுக்கு உணவிடுவது ஒரு சிறந்த பரிகாரமாகும். மேலும் காகங்களுக்கு தினமும் உணவு வைத்து வருபவர்களுக்கு செய்வினை கண்திருஷ்டி மற்றும் துஷ்ட சக்திகளிடமிருந்து எந்த பாதிப்புகளும் வராது.

காகம் கனவில் வந்தால் என்ன பலன்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்