ஏப்ரல் 8 இல் மீண்டும் ஆரம்பம்

ஏப்ரல் 8ஆம் திகதி கொழும்பு கல்கிஸை-காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி கல்கிஸையில் இருந்து இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கும் ரயில் வவுனியாவை அதிகாலை 3.15 மணிக்கும், கிளிநொச்சியை 4.25 மணிக்கும் யாழ்ப்பாணத்தை 5.28 மணிக்கும் காங்கேசன்துறை 5.54 மணிக்கும் வந்தடையும் என கூறப்படுகின்றது.

பின்னர், ஞாயிற்றுக்கிழமை 10ஆம் திகதி இரவு 10 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் யாழ்ப்பாணத்தை 10.24 மணிக்கும் கிளிநொச்சியை 11.29 மணிக்கும் வவுனியாவை 12.38 மணிக்கும் மருதானையை 5.20 மணிக்கும் கல்கிசையை 5.54 மணிக்கும் புகையிரதம் சென்றடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.