எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்

நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை 3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் புதன்கிழமை முதல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனால், இன்றும் நாளையும் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.