எத்தனை தடைகள் வந்தாலும் யுக்திய தொடரும்: டிரான் அலஸ்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்தி’ய நடவடிக்கை என்ன தடைகள் வந்தாலும் நிறுத்தப்படாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், யுக்திய நடவடிக்கைகளின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களை காப்பாற்றவும் கைது செய்வதை தடுக்கவும் பலர் முயற்சித்ததாக அமைச்சர் இதன் போது கூறினார்.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் பதவியில் இல்லாவிட்டாலும் யுக்திய நிறுத்தப்படாது என டிரான் அலஸ் வலியுறுத்தினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்