நாட்டின் தற்போதைய நிலவரப்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது குறைந்த அளவிலேயே எரிபொருளை வெளியிடுவதாகவும், வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதையும் மட்டுப்படுத்தியுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.