களுத்துறை – சமனலவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்பே பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபர் ஒருவர் கைத செய்யப்பட்டுள்ளார்.
இம்பில்பே பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சமனலவெவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.