கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்ததற்காகவும், அதற்கு உதவி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த 23 வயதான பிங்புர தேவகே சமிது திவங்க மற்றும் அதே முகவரியைச் சேர்ந்த 48 வயதான சேசத்புர தேவகே சமந்தி ஆவர்.
கைது செய்யப்பட்டவர்கள் இந்தக் குற்றத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணின் தாயார் மற்றும் தம்பி என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தெரிவித்து இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.