இளம் குடும்பஸ்தர் வெட்டி படுகொலை

-முல்லைத்தீவு நிருபர்-

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பாலிநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நேற்று பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கொலை செய்யப்பட்ட நபர் பாலிநகர் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அழகப்பன் அமிர்தலிங்கம் (வயது 40) என தெரியவந்துள்ளது

சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்