இலங்கை ரயில் திணைக்களத்தின் புதிய சேவை அறிமுகம்

ரயில் சேவை குறித்து தகவல்கள் பெறவும், முறைப்பாடு செய்யவும் 1971 என்ற துரித அழைப்பு இலக்க சேவையை இலங்கை ரயில் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 24 மணி நேர அவசர எண் சேவையானது நாளை வியாழக்கிழமை காலை 7.00 மணிக்குப் பின்னர் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, ரயில் சேவைகள், அட்டவணைகள் அல்லது பிற தொடர்புடைய தகவல்கள் பற்றிய ஏதேனும் கேள்விகளுக்கு திணைக்களத்தை தொடர்பு கொள்ள விரும்பும் பயணிகள் எந்த நேரத்திலும் 1971 ஐ அழுத்துவதன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

ரயில் இயக்க அட்டவணைகள், இருக்கை முன்பதிவுகள், கட்டணம், தொடரூந்து பாதுகாப்பு சேவைகளை தொடர்பு கொள்ளுதல் மற்றும் தொடரூந்து தொடர்பான பிரச்சனைகள் போன்ற தகவல்களை மக்கள் பெறலாம்.

இதன் மூலம் பொது மக்கள் மூன்று மொழிகளிலும் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம்.