இலங்கை மக்களுக்காக தமிழக அரசினால் மேலும் 30,000 டன் அரிசி

இலங்கை மக்களுக்காக தமிழக அரசினால், மேலும் 30,000 டன் அரிசி அனுப்பப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி புதுக்கோட்டை, திருச்சி,மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகளில் இருந்து, 30,000 டன் அரிசி தூத்துகுடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அந்த அரிசியை தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய 10 கிலோகிராம் பைகளில் பொதியிடும் பணிகள், தூத்துக்குடி துறைமுகத்தில் இடம்பெற்று வருகின்றன.

குறித்த பணிகளை ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், அரிசியைப் பொதியிடும் பணிகள் நிறைவடைந்ததும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.

அத்துடன், பால்மா மற்றும் மருந்துகளும் சேகரித்து அனுப்பப்படும் என தெரிவித்தார்.