நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் கடந்த 24 மணித்தியாலத்தில் அதிகமான மழைவீழ்ச்சி பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை பகுதியில் 137.8 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும், பெல்கஹதென்ன பகுதியில் 134 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
குருநாகல் மாவட்டத்தின் தம்பதெனிய பகுதியில் 108.2 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
அரபிக் கடல் மற்றும் இலங்கைக்கு கிழக்கே வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் ஏற்பட்ட இரண்டு சூறாவளிகள் காரணமாக, இலங்கையில் மழை நீடிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.