இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற காணிக் கச்சேரி

-கல்முனை நிருபர்-

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, இறக்காமம் – 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்ட காலமாக பராமரித்து, குடியிருந்து வரும் காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கான காணிக் கச்சேரி நேற்று திங்கட்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்த காணிக்கச்சேரியில் பிரதேச செயலகக் காணி உத்தியோகத்தர் என்.எல்.எம். மாஹிர் மற்றும் காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவிற்குரிய கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டதோடு குறித்த பொது மக்களும் பங்குபற்றியிருந்தனர்.