இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – Update

எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் குதித்த தாய் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ள எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் குதித்தனர்.

இச்சம்பவத்தில், 32 வயதான தாயும், 11 வயதான மகனும் எம்பிலிபிட்டிய பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் 5 வயதான மகள் உயிரிழந்துள்ளார்.

11 வயதான மகன் ஆபத்தான நிலையை கடந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

இதேவேளை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த தாய் சற்று முன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.