இராணுவம் அரசியலமைப்புக்கு இணங்கவே செயற்படும்

தொழிற்தகைமை மிகுந்ததாக விளங்கும் இலங்கை இராணுவம் வேறு நோக்கங்களின்றி அரசியலமைப்புக்கு இணங்கவே செயற்படும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையை தளமாக கொண்ட உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு இணைப்பாளர்கள், ஆலோசகர்களுடன் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.