இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பம்

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகள் சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் இன்று வெள்ளிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலில் இருந்து இன்றைய தினம் எரிபொருளை தரையிறக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன.