-மூதூர் நிருபர்-
மூதூர் – தாஹாநகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அடக்கம் செய்யப்பட்டது.
குறித்த கொலை சம்பவத்தில் மூதூர் – தாஹாநகர் பகுதியைச் சேர்ந்த இராசகுமாரி சக்திவேல் (வயது – 74), இராஜேஸ்வரி சக்திவேல் (வயது – 68) ஆகிய இரு சகோதரிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கொலை சம்பவத்தை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 15 வயதுடைய பேத்தி சம்பவ தினமே மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சிறுமி நேற்று சனிக்கிழமை கொழும்பிலுள்ள சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Beta feature