இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

-யாழ் நிருபர்-

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 12 கடற்தொழிலாளர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.