போதைப் பொருள் கடத்தல்காரரான புகுடுகண்ணா எனப்படும் புஷ்பராஜாவின் சகோதரர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து போலி கடவுச்சீட்டில் இலங்கைக்கு வந்த குற்றச்சாட்டிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 36 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது .
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.