ஆளுநர் நந்தலாலை பாராட்டினார் ஜனாதிபதி

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எடுத்த நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் நாட்டின் நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தணிக்கவும் எடுத்த நடவடிக்கைகள் சிறப்பானதே.

எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி தொடர்ந்தும் மத்திய வங்கியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.