ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4G – 5G வசதிகள்

7ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4பு – 5பு வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை முதல் இவ்வாறான இலவச வசதிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, போராட்ட களத்துக்கு அருகாமையில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

எனினும், இதுவரை அதற்கான இணைப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில், பெரிய வெள்ளியை நினைவுகூரும் வகையிலும், ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாகவும் இன்று காலி முகத்திடல் பகுதியில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டுள்ளது.