அழைப்பை நிராகரித்த ரணில் விக்ரமசிங்க

காபந்து அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட இந்த அழைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கி புதிய பிரதமரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் பரிந்துரைத்துள்ளார்.

இல்லாவிட்டால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, இடைக்கால ஜனாதிபதி மற்றும் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க நாடாளுமன்றத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் பிரதமரின் இந்த யோசனைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணங்குவதாக தெரியவில்லை.

எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.