அரசாங்கத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹோமாகம பிரதேசத்தில் இளைஞர்கள் குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஜா-எல பகுதியிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியின் ஜா-எல பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.