அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா

பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர்ந்த அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்களை இராஜினாமா செய்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் தொடர்ந்து செயற்படுவார் மற்றும் அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு வழங்கியுள்ளனர் என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்து வரும் சில நாட்களில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.