விவசாயிகளுக்கு உரம் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்-

திருகோணமலை – தோப்பூர் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட நஜா விவசாய சம்மேளன விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச மானிய பசளை (MOP) விநியோகம் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

இதன்போது நஜா விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட 213 விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட MOP பசளை இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதேவேளை கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக விவசாயிகளின் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்