வன பகுதியில் உல்லாசம் : 8 பேர் கைது!
வன பகுதியில் உல்லாசமாக இருந்த 8 பேரை நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்து உள்ளனர்.
காட்மோரில் வனத்தில் இருந்து கவரவில்லை பகுதிக்கு செல்லும் சமவெளி வன பகுதியில் வைத்து கைது செய்து உள்ளனர்.
25 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள், 25 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆறு ஆண்கள் என 8 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வனப்பகுதியில் சிலர் உல்லாசமாக இருப்தாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர், சந்தேகத்தின் பேரில் சாலாவ பகுதியில் உள்ள எட்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்