வட மாகாணத்தில் கைத்தொழில் கண்காட்சி

இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நகரில் கைத்தொழில் கண்காட்சி ஒன்று ஆரம்பமாகியுள்ளது!

இக்கண்காட்சியை கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் ஏற்பாடு செய்துள்ளன.

கண்காட்சி கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்பத்திரனவின் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போதுஇ முதலீடு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தல்களும் வழங்கப்படவுள்ளதாக, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பொறியியல்துறை பணிப்பாளர் நிஷாந்த வீரதுங்க தெரிவித்தார்.

வட மாகாணம் பாரிய நிலப்பரப்பை கொண்டுள்ள போதிலும், மொத்த தேசிய உற்பத்தியில் சிறிய பங்களிப்பையே வழங்குகிறது. இதனை அதிகரிப்பதற்கான தெளிவுப்படுத்தல்களை இந்த கண்காட்சியின் ஊடாக வழங்குவதற்கு தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்