ராகுவின் பார்வையால் அதிர்ஷ்டத்தை அள்ளும் 3 ராசியினர்

27

ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. ராகுவின் தாக்கம் எப்போதும் மிக அதிகமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவருடைய நட்சத்திரத்தில் ராகு மங்களகரமற்ற இடத்தில் இருந்தால், அவர் வாழ்க்கையில் அனைத்து விதமான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

ஒருவருடைய ஜாதகத்தில் ராகு திசை நடந்தால் எதிர்பாராத வகையில் பல பிரச்னைகள் வரும். நடக்கக் கூடாது என நினைக்கிற அனைத்தும் நடக்கும். குறிப்பாக இல்லற வாழ்க்கையில் பிரச்சனை, திருமண வாழ்க்கையில் தோல்வி, கணவன் – மனைவிக்குள் பிரிவு, வம்பு வழக்குகள், இழப்புகள் ஆகியவை ஏற்படும். சனிக்குப் பிறகு, ராகு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல நீண்ட நேரம் எடுக்கும் இரண்டாவது கிரகமாகும். ராகு பெயர்ச்சிக்கு 18 மாதங்கள் எடுத்துகொள்கிறது.

ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் நுழையும் போது, ​​அதன் நல்ல, கெட்ட பலன்கள் அனைத்து ராசியினரின் மீதும் ஏற்படுகிறது. ஜாதகத்தில் கிரகங்கள் சரியான திசையில் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் விலகும். தற்போது, ​​சனி அதனுடைய சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார்.

கடந்த ஆண்டு, அக்டோபர் 30, 2023 அன்று, ராகு செவ்வாயின் ராசியான மேஷ ராசியிலிருந்து விலகி, வியாழனின் ராசியான மீனத்தில் நுழைந்தார். ராகு 18 மே 2025 வரை மீனத்தில் இருப்பார். அதன் பிறகு சனியின் ராசியான கும்பத்தில் ராகு நுழைகிறார். ராகு ஒரு ராசியில் நுழையும் போதெல்லாம், அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ராகுவின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், சில ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். 2025 வரை மீனத்தில் ராகு இருப்பதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

மிதுனம்

ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் நுழைகிறார். ஜாதகத்தின் ஒன்பதாம் வீடு அதிர்ஷ்ட வீடு. இந்த சூழ்நிலையில், இதனால் உங்கள் நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும். உங்களுடைய பரம்பரை சொத்துக்களை பெறுவீர்கள். இது உங்கள் வாழ்க்கை முறையை பெரிதும் மேம்படுத்தும். வேலை தேடுபவர்களுக்கு இது மிகவும் நல்ல நேரம். பணியிடத்தில் மரியாதையும் புகழும் பெறுவீர்கள்.

ரிஷபம்

ராகு உங்கள் ஜாதகத்தில் 11வது வீட்டில் இருக்கிறார். செல்வம் மற்றும் ஆடம்பரத்தில் குறைவு ஏற்படாது. உங்கள் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் காண்பீர்கள். உங்கள் வருமானம் தொடர்ந்து அதிகரிக்கும். பணியாளர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபமும், புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லாவிதமான மகிழ்ச்சியையும் செழிப்பையும் காண்பார்கள். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த வேலையும் நீண்ட காலம் தேங்கி நிற்காது. ராகு பகவான் உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.

விருச்சிகம்

ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் நுழைந்துள்ளார். அத்தகைய சூழ்நிலையில் ராகு மீனத்தில் இருக்கும் வரை மட்டுமே உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அதை திரும்பப் பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் நிதி ஆதாயத்திற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. வருமானத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath