யாழ்.நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம்

-யாழ் நிருபர்-

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

இத் தேவஸ்தானத்தின் உற்சவமானது கடந்த 15.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் இன்று இரதோற்சவம் இடம்பெற்றதுடன், எதிர்வரும் 24.02.2024 அன்று தீர்த்தோற்சவம் இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் மஹோற்சவம் இனிதே நிறைவடையும்.

இவ்மஹோற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.

பூந்தண்டிகை மஹோற்சவத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்