மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு தீ வைப்பு

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டு வீட்டுக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, கமகொட, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சில காலமாக இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும், சந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை மாலை மது போதையில் வந்து றப்பர் மெத்தை, தலையணைகள் மற்றும் துணிகளை எரித்துள்ளார். அப்போது வீட்டில் மனைவி இருந்தமை இதுவரையிலான விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் வீட்டின் சமையலறை முழுவதும் சேதமடைந்துள்ளது, ஆனால் முறைப்பாட்டாளர் தனது ஆடைகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்