
‘மக்களிடத்தில் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன்’
மக்கள் படும் துன்பங்களை பார்த்து, அரசாங்கம் என்ற வகையிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்றவகையிலும் மக்களிடத்தில் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன்.
அவர்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்தை விமர்சிப்பதை கண்டு புதுமையடையத் தேவையில்லை என்கிறார் எஸ்.பி.திஸாநாயக்கா
எரிபொருள் வரிசை, சமையல் எரிவாயு வரிசை, இன்னும் பல வரிசைகளில் நிற்கும் மக்கள், “கோட்டா வீட்டுக்குப் போ” என கூறுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
ஏழு, எட்டு மணிநேரம் மின்சாரம் இன்றி வீட்டுக்குள் இருக்கும் போது, பதாகையை ஏந்திக்கொண்டு, வீதிக்கு இறங்குவதற்கு எனக்கும் எண்ணம் வரும் என்றார்.