மகாத்மா காந்தி வரலாறு கட்டுரை

மகாத்மா காந்தி வரலாறு கட்டுரை

மகாத்மா காந்தி வரலாறு கட்டுரை

💥மகாத்மாகாந்தி1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார். காந்தியடிகளின் முழு பெயர் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி ஆகும். கஸ்தூரிபாய் என்பவரை தனது 13வது வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர் தனது 16வது வயதில் தந்தையை இழந்தார். இவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தது.

கல்வி

💥மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

💥1893ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் மேற்கொண்டார். அக்காலம் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி, இனப்பாகுபாடு மேலோங்கி காணப்பட்டது. இது காந்தியை வெகுவாகப் பாதித்தது.

இந்திய விடுதலைப் போர்

💥இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரராவார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும் இந்திய விடுதலைக்காகவும் பாடுபட்டவராவார். 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.

💥ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922 ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.

காந்தியடிகளின் கொள்கைகள்

💥காந்தியடிகள் பகவத் கீதை, சமய கொள்கைகள், லியோ டால்ஸ் டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டவார். சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார்.

💥வைணவ குடும்பத்தில் பிறந்ததால் சைவ உணவுகளை உண்டார். குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார்.

💥மேலைநாட்டு உடைகளைத் தவிர்த்து இந்திய நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடைகளையே அணிந்தார். இந்திய விடுதலைக்காகப் போராடிய அகிம்சை வீரனாவர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

💥1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது.

இறப்பு

💥காந்தியடிகளின் உயிரானது துப்பாக்கி குண்டால் பறிபோனது. 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி தில்லையில் “நாதுராம் கோட்சே” என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

💥இவரது தியாகத்தை கௌரவிக்கும் வகையில் காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் திகதி காந்தி ஜெயந்தி என்ற பெயரில் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுரை

💥அகிம்சை என்றால் காந்தி என்றும், காந்தி என்றால் அகிம்சை என்றும் இந்திய மக்கள் மட்டுமன்றி உலக மக்கள் மத்தியிலும் எண்ணப்படும் விடுதலைப் போராட்ட வீரரானான காந்தியடிகள் முன்னுதாரணமான தலைவராவார்.

💥இந்திய கல்வித்திட்டத்தில் காந்தியின் வரலாறானது ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. தன் வாழ்வில் சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளைக் கடைபிடித்து அதன்படி வாழ்ந்த மகான் ஆவர். நாமும் நாம் வாழ்நாளில் அகிம்சை, சத்தியம் போன்றவற்றை கடைப்பிடித்து வாழவேண்டும்.

மகாத்மா காந்தி வரலாறு கட்டுரை

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்