பெண் சிறைக்காவலரை கொலை செய்ய கைதியுடன் ஒப்பந்தம்: விசாரணைகள் ஆரம்பம்

காலி சிறைச்சாலையின் பெண் சிறைக்காவலரை அதே சிறைச்சாலையில் கொலை செய்ய ஒப்பந்தம் வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸ் முறைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது.

பல்வேறு குற்றச் செயல்களுக்காக காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதி ஒருவருக்கே சிறைச்சாலை அதிகாரி இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைக்காவலரைக் கொல்வதற்கான ஒப்பந்தத்தை சிறைக்காவலர் தனக்கு வழங்கியதாக அந்த கைதி பெண் மற்றொரு பெண் கைதியிடம் கூறியதை அடுத்து விஷயம் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்