பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு விழா

-கிண்ணியா நிருபர்-

தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு விழா தி/ஆதிகோனேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயகெளரி ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வினை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த கலைஞர்கள் கௌரவிப்பில் ஊடகம், கலை, எழுத்து துறை என சுமார் 117 கலைஞர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டார்கள்.

இதில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி கலந்து சிறப்பித்தார். அறநெறி பாடசாலை மாணவ மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இதன் போது மேடை ஏற்றப்பட்டன.

இதில் தவத்திரு அடிகளார் குருமகா சந்நிதானம் தென்கயிலை ஆதினம், முன்னாள் மாகாண உதவி காணி ஆணையாளர் க. ரவிராஜன், உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்