பளை பிரதேசத்தில் இன்று மண்ணெண்ணெய் விநியோகம்

-கிளிநொச்சி நிருபர்-

பளை பிரதேசத்தில் நேற்று முன்தினம், நேற்று மற்றும் இன்று மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றிருந்தது.

குடும்ப பங்கீட்டு அட்டைக்கே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டிருந்தது.

பளை பிரதேச செயலக உத்தியோகத்தரின் கண்காணிப்பில் ஆள் அடையாள அட்டை மற்றும் குடும்ப பங்கீட்டு அட்டை பதிவு செய்தே குறித்த மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.

குறித்த எரிபொருள் நிலையத்தில் இராணுவம் பாதுகாப்பு கடமையில் உள்ளமையும் அவதானிக்க முடிந்தது.